Text Widget

Sunday, January 31, 2010

சரஸ் பினாங்கு கவிதைகள்

Posted on 8:57 AM by கே.பாலமுருகன்

ரணம்

மனதின் கணங்கள்
ஆராயப்பட வேண்டாம்
அங்கே இருப்பது
ஆழமான சேதமும் வலிகளுமே

நட்பு

நான் சந்தித்தவர்களில்
பிரியாமல் இருப்பவள்
நீ மட்டும்தான்
நான் பிரிந்தவர்களில்
சந்திக்காமல் இருப்பவளும்
நீ மட்டும்தான்
நினைவு

மனதோடு இருக்கும்
மழைக்காலம்
இன்னமும் மீளாத
ஒரு வசந்தகாலத்துடன்
உள்ளம் எங்கும் இளமை
இதயம் முழுவதும்
பால்யத்தின் கால்தடங்கள்
கை முளைத்து கால் உதைத்து
சுவாசமிட்ட நினைவுகள்
ஊர்வலம் போகின்றன
இறந்தகாலத்தோடு கைக்கோர்த்து.

No Response to "சரஸ் பினாங்கு கவிதைகள்"

Leave A Reply